Posts

Showing posts with the label தன்னம்பிக்கைக் கட்டுரை

பலப்படுத்தும் பயணங்கள்: முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
                   பலப்படுத்தும் பயணங்கள் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 பயணமெனும் நகர்வுத் தியானம் உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா  உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விர...

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்

Image
அனுபவம் எனும் அற்புதஆசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும்   பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம், அதிர்ச்சிகள் வராது தடையாளும் கருவூலம். மழைநாளுக்குப் பிறகு மண்ணைத் துளைத்து வெளியேறும் மண்புழுவைப் போல் தன்னைத் துளைத்துத் தன் சுயத்தைக் காட்டும் விஸ்வரூப விருட்சம்   அனுபவம். சல்லடையை வைத்து சமுத்திரத்தைச் சலிக்க முடியுமா? அனுபவத்தைப் புறந்தள்ளி யாராவது சாதிக்க முடியுமா? நினைவுப் பாம்புகள் புலப்பப் புற்றிலிருந்துதான் புடைதேடி வருகின்றன. அனுபவசாலிகள் என்றும் புலம்பலை மறந்த புத்திசாலிகளாகவே திகழ்கிறார்கள்.நம் அனுபவங்களை முதலீடாக்கி நம் முயற்சியை நாம் தொடங்கினால் என்ன?   சிக்கல் களையும் சிறப்புமருத்துவர் கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது. தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால் தேவையானதை விற்கவேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. நம் செயல்களை நிறுக்கும் அரூபத் தராச...

தினமலர் என் பார்வை: அன்பென்ற மழையிலே நனைவோம்

Image
எப்போது பார்த்தாலும் ஏதோவொரு வெறுமை,பேசும் சொற்களில் எப்போதும் சலிப்பு,யாருமில்லாமல் தனித்துவிடப்பட்டதைப்போன்ற உணர்வு,எதையாவது மனதில் போட்டுக் குழப்பி வருத்தத்தோடு வாழும் வாழ்க்கை..நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.  சின்னபலூனுக்கும் ஒருரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக் கண்டபின்னும்கூட நிம்மதி இழந்த மனிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும்கூட மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன்? புரிந்துகொள்ள முடியாத புதிராக நம் வாழ்க்கையை மாற்றியது யார்? மாற்ற முடியாதா இந்தவாழ்வின் போக்கை.   “தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடல் வரி நமக்குத்தான். அர்த்தமற்ற மாயஇலட்சியங்களுக்காக வாழ்வைப் பணயம் வைத்தவர்கள்,வாழ்வின் பொருளே பொருளோடு வாழ்வது என்பதற்குப் பதில், பொருள்தேடி ஓடுவது என்று ஓடியவர்கள்,விட்டுக்கொடுக்காமல் எதற்கும் வளைந்து கொடுக்காமல் விடாப்பிடியாக எதையாவது பற்றி நின்றவர்கள் எப்படி நிம்மதியின் சந்நிதியில் அமைதியைக் கொண்டாடி நிற்கமுடியும்? ...