தமிழ் இலக்கியப் பதிவுகளில் சூரசம்ஹாரம் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சஷ்டியில் விரதமிருந்தால் அகம் எனும் பையில் அருள்சுரக்கும்! அந்த அளவு வலிமை மிகுந்த கந்தர் வழிபாடும் சூரசம்ஹாரமும் பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டதைத் தமிழ் இலக்கியம் பாடல்வரிகளால் பதிவுசெய்துள்ளது. தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தந்துவந்த சூரபத்மனின் அகந்தையை அழிப்பதற்குச் சிவபெருமான் தன் அதோமுகத்தைக் காட்ட அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிருந்து ஆறுமுகங்கள் ஆறு குழந்தைகளாய் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் எழுந்தருள, அவர்களை ஆறுகார்த்திகைப் பெண்கள் வாரியணைக்க ஈசன் சில காலத்தில் ஆறுமுகப்புதல்வர்களை ஒன்றாக்கினார். முருகப்பெருமான் சூரனை அழிக்க நூறுமுகங்களின் ஒளிப்பிழம்போடு ஆறுமுகமாய் அவதரித்தார். அன்னை பராசக்தி தன் சக்தியை ஒன்றுதிரட்டிச் சக்திவேலை தந்தாள். தாய் தந்த வேலை சூரபத்மன் மீது திருமுருகன் வீச அவன் மாமரமாய் மாயத்த...
பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி mahabarathi1974@gmail.com , cell 9952140275 நம் தாயிடமிருந்து கற்கும்மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழிதான். நம் விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது. தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ் , எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று . பண்பாட்டோடு தொடர்புடைய மொழி . உலகம்முழுக்க எட்டுகோடி தமிழர்களின் தாய்மொழியாய் உள்ள தமிழ்மொழி திராவிடமொழிகளின் தாயாகத் திகழ்கிறது. உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில் பிறந்து நீண்டதொல்மரபின் தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி நம்மருமைத் தாய்மொழி. ஆதிநாகரீகத்தின் சாட்சியாய் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூரி...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர்- 3 எவரெஸ்ட்டும் நமக்கு எட்டும் தூரத்தில்தான் ................................................................................................... மகத்தான சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி,9952140275 முடியாதென்ற முடிவு முடமாக்கும் நம் வாழ்க்கையை, முடியுமென்ற தீர்வு திடமாக்கும் நம் சாதனையை. முடியாதென முனகுகிறவனுக்கு விடியாது எந்நாளும். பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை பிடித்த துயரமனம் வாழ்வை வழுக்கித் தள்ளும். எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் நம்மை சில நேரங்களில் வியக்க வைக்கிறார்கள், சில நேரங்களில் தங்கள் வேகத்தாலும் விவேகத்தாலும் நம்மை இயக்கவும்வைக்கிறார்கள். கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத சாதனை படைத்த மகத்தான மாற்றுத்திறனாளிகள் ச...
Comments
Post a Comment