தெளிவார்கள்



எதுவும் தெரியதில்லை என்கிறார்கள்
யாரவது யாரையாவது பார்த்துத் தினமும்.
தெரிந்து என்ன ஆகப்போகிறது?
தெரியாமலிருப்பவனே தெருவோரம்
நிம்மதியாய் நித்திரை புரிகிறான்.
சுருட்டிவைத்த பழையதுணி மூட்டைகளோடு
மங்கம்மாசாலையில் அலைபவனைச்
சித்தபிரமை பிடித்தவனென்று
பால்பூத் அண்ணாச்சி சொன்னார்.
சொன்னதைக் கேட்டுத்தொலைத்தானோ என்னவோ
எல்லாம் விட்டுச் சுதந்திரமாய் திரிந்தவன்-அதன்பின்
மூட்டைகளையும் விட்டுவிட்டு வேறிடம் போய்த்தொலைந்தான்.
 விட்டுவிடுதலையானவனையும் விட்டுவிடமறுக்கிறோம்.
அவர்கள் சொன்ன முன்னைச்சொற்றொடர் போல்
தெரியாமல் சொல்கிறார்கள் சொல்லிவிட்டுப்போகட்டும்
தெளிவார்கள் பின்தொடரும் ஏதேனுமொரு நாளில்.
*
சௌந்தர மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை