சொல்லாமலே- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.




படியில் அமர்ந்தால்
ரித்திரம் வருமென்றாய்
தலைக்கு மேல்
தனமிருந்தாலும்
தலையணை மீதமராதென்றாய்
அரிசி தின்றால்
மண நாளன்று
மழை கொட்டுமென்றாய்
கிளம்பும் போது
நிலையில்
தலை தட்டினால்
செம்புத் தண்ணீரருந்தி
ஒருவிநாடி
அமர்ந்து செல்லென்றாய்
வரைபடத்தை
வைத்துக்கொண்டு
வானிலை அறிக்கை
வாசிக்கிற அந்த
வானிலை நிலைய
அதிகாரியைப்போல. . .
வரலாம்
வராமலும் போகலாம்
எதுவும்
நடக்கலாம்
நடக்காமலும் போகலாம்
என்ற உண்மையை மட்டும்
ஏனெனக்குச்
சொல்லாமலேயே
வளர்த்தாய் அம்மா?




Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி