ஒன்றுமற்ற வாழ்வு



ஒன்றுமற்ற வாழ்வு
கார்பைடு கல்லுக்குள் கனியாகும்
தேமாங்காய்கள்.
கத்தி எடுத்தால் மட்டுமே திறக்கும்
கர்ப்பப்பைகள்.
எந்திரங்கள் இழுத்து நிலையம் சேரும்
ஆனித்தேர்கள்
கல்யாண வீடுகளில் மாடு தின்றுவிடாமலிருக்க
உரச்சாக்கு சுற்றப்பட்ட வாழைமரங்கள்.
ஊரெங்கும் பெருகி விடாமலிருக்கக்
கருத்தடை செய்யப்பட்ட நாய்கள்
தொட்டிகளில் வளரும்
போன்சாய் ஆலமரங்கள்

இத்தனையும் பார்த்து
பனிக்கட்டி ஏந்திய
பள்ளிச் சிறுவனின்
உள்ளங்கை போல்
ஒன்றுமற்று வாழ்கிறேன்.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை