ஆதியின் பாதிகள்



ஆதியின் பாதிகள்

ஆதியின் சாயலில்
யாவரும் பிறக்கிறோம்
ஆதியின் சுவாசத்தில்
யாவரும் பிழைக்கிறோம்
ஆதியின் வியாதியால்
யாவரும் மடிகிறோம்
ஆதியின் மொழியில்
யாவரும் பறைகிறோம்.

ஆதியால் ஜனித்து
ஆதியால் வாழ்ந்து
ஆதியால் வீழ்ந்து
இறந்தகால ஆதியின்
நிகழ்காலப் பாதியாய்
வாழும் நாம்
ஆதியின் எச்சங்கள் என்பதே
சாலப் பொருத்தம்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை