கழுதைகளான காளைகள்


 
கழுதைகளான காளைகள்

எச்சில் இலைகளை உண்ண
எதிர்பார்ப்புடன்
காத்திருந்த காளைகளுக்கு
அதே வடிவில்
வெளியே வீசியெறியப்பட்ட
பச்சைக் காகித இலைகளால்
ஏமாற்றம்.
பாவம்.. அன்று முதல்
காகிதம் தின்னும்
கழுதைகளாயின
அக்காளைகள்
உரச்சாக்கு சுற்றப்பட்ட
குலைவாழைகள்
விழா முடிந்தபின் குப்பைத் தொட்டியில்..
உரச்சாக்கை உரிக்கத் தெரியாமல்
சுற்றி வருகின்றன அக்காளைகள்.

அப்போது

கழுதையானகாளைகழுதைகளான காளைகள்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை