பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி mahabarathi1974@gmail.com , cell 9952140275 நம் தாயிடமிருந்து கற்கும்மொழி, நமக்குத் தாயாய் அமைந்து உலகியலைக் கற்பிக்கும் மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழிதான். நம் விழியாய் அமைந்து எல்லாவற்றையும் பார்க்கத் துணைபுரிகிறது. தாய்மொழி எனும் பெருவரத்தின் ஆற்றல் புரியாமல் இன்னும் அயல்மொழிகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு திரிகிறோம். தமிழ் , எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று . பண்பாட்டோடு தொடர்புடைய மொழி . உலகம்முழுக்க எட்டுகோடி தமிழர்களின் தாய்மொழியாய் உள்ள தமிழ்மொழி திராவிடமொழிகளின் தாயாகத் திகழ்கிறது. உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தில் பிறந்து நீண்டதொல்மரபின் தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி நம்மருமைத் தாய்மொழி. ஆதிநாகரீகத்தின் சாட்சியாய் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்ச நல்லூரி...
Comments
Post a Comment