யாவரும் தோளரே!





பேருந்துப் பயணங்களில்
விழித்திருந்து ரசிப்பவனாகவே!
பெரும்பாலும் நானிருப்பதால்
பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி
சில்லென்ற சன்னல் காற்றின்
சிலுசிலுப்பால் அயர்ந்து தூங்கியபடி
என் வெண்சட்டையணிந்த
தோள்மீது தலைசாய்க்கும்
அந்தப் பெயர் தெரியாத
பயணியின் தலை சுமக்கும்
தோழமை மிக்கத் தோளன் நான்
யாதும் ஊரே
யாவரும் தோளரே!
துயில்பவரைத் துன்பப்படுத்தி
எழுப்பாமலிருக்கும் வரை.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை