பழஞ்சோலைத் தூளி உறக்கம்





சொக்கட்டான் தோப்புக்கருகே இருக்கும்
வயற்காட்டு மண்முகட்டில்
வேப்பமரத்தடியில்
கட்டிய பழஞ்சேலைத் தூளியில்
தாயின் தாலாட்டுப் பாட்டொலியில்
தன்னை மறந்து தூங்குகிறது தளிர் ஒன்று!

களை பறித்துப் காததூரம் நகர்ந்தாலும்
அவள் கவனமெல்லாம் தூளியில் தூங்கும்தன் தூங்கும் தன்
கைக்குழந்தையைக் குறித்துத் தான்

தொட்டில் கயிறு இல்லை
தொங்கவிடச் சுருள் கம்பி வசதியில்லை
இடைக்கட்டையில்
சுற்றி நிற்கும் பொம்மை ஏதுமில்லை
மேற்சுழ மின்விசிறி எப்போதுமில்லை


ஆனாலும்...
வியர்வைத் துளிகளின்
உறவு வாசத்தோடு
ஏழைத்தாயின் தாலாட்டுப் பாடலுக்கு
மயங்கிக்
கண்ணுறங்குகிறது
அக் கற்கண்டுக் கனியமுது.


                                முனைவர். ச. மகாதேவன்

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி