வேறென்ன வேண்டும்?

கவலை மறக்க நட்சத்திரக் கலை இரவுகள்
காமெடி பார்க்க நகைச்சுவை அலைவரிசைகள்
பூரித்துப் போகப் புல்டாக் டைம்கள்
பயணக் களைப்பு நீங்கப்
பண்பலை வானொலிகள்

தேசப்பற்று காட்ட அவ்வப்போது
உலகக் கோப்பை வெற்றிகள்

விழாக்கள் வந்தால்
பட்டி மண்டப் படையல்கள்
நுகர்வுப் பொருள் நிறைக்கக்
கை நிறையக் கடன் அட்டைகள்
‘எவன் செத்தால் எனக்கென்ன?
‘குயிலாடக் கும்பாளம் போட...
பார்ப்போம் வா…!

                                                     முனைவர். ச. மகாதேவன்

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை