ஆலய மணிநா...







செந்தூர் கோவில் பூசை மணியோசையைக்
கேட்டபின்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்
மதிய உணவருந்தச் செல்வானாம்.

சவேரியார் கோவில் ஆலயமணி
விட்டு விட்டு ஒலித்தால்
சவவண்டி வந்துவிடுமென
பயந்து ஓடிய பள்ளி நாட்கள் இன்னும் நினைவில் உண்டு

பூசை நேரத்தில் ஒற்றை விசையில்
இயங்கும் மின்சார மேளதாள
மணிபொலியையும் கேட்கிறேன்.

இப்போது என் நினைவெல்லாம்
நா அறுந்து போனதால்
ஆண்டி நாடார் கடைக்கு
விற்கப்பட்டு உருக்க
உள்ளுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் பரம்பரைக் கோவிலின்
தொன்மையான
ஆலய மணியைப் பற்றிதான்.

நினைத்துப் பார்க்கிற யாவுமே
உயிரின் வேரை
நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை