காற்றின் காதுகளில்…





யாருக்குத் தெரியும்?
இழுத்துக் கொண்டு கிடக்கிறவரின்
இறுதி நினைவு இன்னதென்று!

யாருக்குத் தெரியும்?
பூர்வீக விட்டை வறுமையை எதிர்கொள்ள
விற்றுவிட்டுப் போகிறவனின்
இறுதிப் பார்வையின் பொருள்?


யாருக்குத் தெரியும்?
கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தையை
நாலு விலங்குகள் சிதைத்த பின்
சொன்ன இறுதி ரணச் சொல்

இப்படி…
யாருக்கும் தெரியாச் சொற்கள்
உண்டு கோடானு கோடி
காற்றின் காதுகள் மட்டுமே அறியும்
காலமானவனின்
கடைசி வார்த்தைகளை…

Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி