செந்தமிழ்நாடு



பள்ளிகளிலெல்லாம்
வங்கிகளின் விரிவாக்கக் கிளைகள்
கோடிகளை வசூலிக்க வசதியாய்
வாடகை அதிகமென்பதால்
ஆம்புலென்சுகள் அதிகம் பயணிப்பது
மயானங்களை நோக்கித்தான்

பிரசவ ஆஸ்பத்திரியின்
லேபர் வார்டிலே வரவேற்பு வளைவு போட்டால்தான்
குழ்ந்தையே வெளியில் வருவேனென்கிறது
அரசியல் வாதியின் அடுத்த வாரிசுகள்
அடம் பிடிக்கின்றன.

தமிழ் படிக்கத் தமிழ்க் குழந்தைகள்
புலம்பெயர்ந்த தமிழர் நாடுகளுக்குப்
பயணமாகிக் கொண்டிருக்கின்றன.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை