Posts

Showing posts from June, 2015

தி.ஜானகிராமன் என்கிற கதைக் காவேரி : முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Image
           ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் உணர்வுப்பூர்வமாக எழுதுவது எத்தனை அருமையானது.  தி.ஜானகிராமன் குறித்து பாலகுமாரன் எழுதிய கட்டுரையை வாசித்தபோது நிறைவாய் இருந்தது.   இருட்டுப்பரப்பில் சட்டென்று ஒளியை வீசி இருண்மையைக் கேலிசெய்கின்ற   மின்மினிப்பூச்சிகளாய் சில சம்பவங்களையும்,சில மனிதர்களையும் பற்றிய நினைவுகள் சில கணங்களில் சட்டென்று நம் மனதில் மின்னலாய் வெட்டி ஒளியை வீசிச்செல்லும்.  தி.ஜானகிராமன் அப்படிப்பட்டவர். சொற்கள் குறுகிமௌனமாய் மறைவதைப்போலஅவர் படைத்த கதைகள் நம்முள் கலந்து,பாத்திரங்கள் கரைந்து அவரது இனிய காவேரியைப் போலச் சமுத்திரத்தை நோக்கிச் சலனமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆண் பெண் உறவுகளை மையமிட்ட உளநிலைப் போராட்டத்தை மையமாகக்   கொண்ட பாத்திரங்களைப் பேசவிட்டு உணர்ச்சிகரமான,தேர்ந்த மொழிநடையால் புதினங்கள் படைத்து இறவாப்புகழ் பெற்றவர். தன் எழுத்துத் தூரிகையால் கும்பகோணம் மண்மீது வாசகர்களுக்குக் காதலை உண்டாக்கியவர்.  அவரது மோகமுள் தைத்து அதன் ரணத்திலும் அதுஉள்ளுக்குள் ஏற்படுத்திய சொல்லொணா மணத்திலும் சிக்கி இன்னும் வெளியேவராத தீவ

இல்லமெனும் இனிய பள்ளி ; முனைவர் சவுந்தர மகாதேவன்

Image
               முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி  வகுப்பறைகள் மாறிவிட்டன, சாக்பீஸ் தூக்காமல், மவுஸ் பிடிக்கும் நவீனஆசிரியர்கள்,குளிர்சாதன வசதிகொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் எல்.கே.ஜி. மாணவ மாணவியர்,கரும்பலகைக்கு மாற்றாய் வெண்திரைகள், அந்த வெண்பலகையில் எழுதிய யாவற்றையும் சேமிக்கும் ஆற்றல்மிகு கணினிகள்,  நினைத்த மாத்திரத்தில் தேடுபொறிகளின் உதவியால் பாடத்தையும் படத்தையும் கண்முன் கொண்டுவரும் அதிவேக இணையவசதிகள்..காதால் கேட்டும், கண்ணால் கண்டும், கற்கஉதவும் மொழிஆய்வகங்கள் என வகுப்பறைகள் வசதியாக்கப்பட்டு விட்டன.  கற்றல் சுகமான அனுபவமாகி இருக்கிறதா ? மகிழ்ச்சியோடு நம் குழந்தைகள் கற்கிறார்களா? வினா எழுகிறது அவ்வப்போது.  இரட்டைக் கோடு நான்கு கோடு போட்ட அழகான எழுத்துப்பயிற்சி ஏடுகள், வளைந்து நெளிந்து எழுதும் பிஞ்சுவிரல்கள் என்று எத்தனை சுகமாக இதமாகக் கற்றோம்?   அன்று எழுத்து எத்தனை சுகமான அனுபவம்! வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம்