Posts

Showing posts from April, 2013

தண்ணீர் சௌந்தர மகாதேவன் நெல்லை

Image
ஆடி பதினெட்டில் ஆறு பார்க்கச் சென்றோம் மறக்காமல் தண்ணீர் பாட்டிலோடு   சௌந்தர மகாதேவன் நெல்லை  

வீசி எறியப்படுகின்றன

Image
அதி காலையில் வீடுகள் தோறும் வீசி எறியப்படுகின்றன பாசமும்   பால்பாக்கெட்டும்  

வெற்று மனசு சௌந்தர மகாதேவன் நெல்லை

Image
வெக்கையில் காயும் வேட்டி   மாதிரி சில நேரங்களில் வெறுமையில் காய்கிறது இந்த வெற்று மனசு சௌந்தர மகாதேவன் நெல்லை  

கடக்க முயலும் சௌந்தர மகாதேவன்

Image
அடக்க முயலும் எதுவும் விரைவாய் கடக்க முயலும் சௌந்தர மகாதேவன்  

எங்கே அடை காப்பது ? சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Image
குத்திக் கிழிக்கிற குளிர் நிசியில் கைகளைக்   கக்கத்தில் நுழைத்து சுய சூடு பெறுகிற சுபராய தாத்தா போல் சுய சூட்டில்தான் யாவரும் குளிர்காய   வேண்டி இருக்கிறது இதில் அக்கினிக் குஞ்சை எங்கே அடை காப்பது ? சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி  

பனை இணை ,சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Image
பரியா மருதபட்டி ப் பனைதேரியில் நொங்கு நோண்டித் தின்ற பெருவிரலின் நகக்கணுவில் இன்னும் ஈரம் மிச்சமிருக்கிறது அப்புறம் ஓட்டிய நொங்கு வண்டியின் பளபளப்பு கண்களின் ஓரம் இன்னும் மிச்சமிருக்கிறது. விடுமுறைக்குப் போன புதுப்பட்டிப்பாட்டி வீட்டுப் பனையோலைக் குடிசை இன்றும் வாழநினைக்கும் வசந்தசொர்க்கம் வாசக் குளிர்ச்சியால் மனதை வருடிய பனையோலை விசிறிக் காற்று தொட்டிலைச் சுமந்த உத்திரம் நிலத்தைப் பதிந்துவைத்த பனையோலைப் பத்திரம் யாவும் பனைதான் யாவும் பனைதான் என்றும் நம் மானுடத்தின் இன்பியல் இணைதான்