Posts

Showing posts from November, 2018

சமகாலப் போக்குகளை உள்வாங்கி எழுதியவர் க.நா.சு.

Image
சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி தமிழ் இலக்கியப் பரப்பில் க.நா.சு. தொடங்கிவைத்த விமர்சன மரபு, புதிதானது, புதிரானது. படைப்பில் அவர் காட்டிய அதே அக்கறையை விமர்சனத்துறையிலும் காட்டினார்.  அவர் முன்வைத்த விமர்சனமுறை குறித்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் தன் நிலைப்பாட்டிலும் தன் கறாரான பார்வையிலும் உறுதியாக இருந்தார்.  நாம் அளவுக்கு அதிகமாய் பழைமையைத் தூக்கிப்பிடிப்பதாய் உணர்ந்தார், உலகில் நடைபெறும் சமகாலப் போக்குகளை ஏன் தமிழ் எழுத்துலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? என்ற கேள்வியை அவர் விமர்சனங்களில் ஆழமாக முன்வைத்தார்.  விமர்சகராகவும் படைப்பாளராகவும் இருதளங்களில் அவர் இயங்கியதால் ஒன்றின் பாதிப்பை இன்னொன்றில் உணரமுடிந்தது. புதுமைப்பித்தன் கதைகள் அவருக்குப் பிடித்தமானது என்றாலும் எல்லாவ்ற்றையும் அவர் கொண்டாடவில்லை, புதுமைப்பித்தன் கதைகளில் முப்பது கதைகள் சிறப்பான கதைகள் என்பது அவர் கணிப்பு.  வாசகரை நினைத்துக் கொண்டு படைப்பாளிகள் கதைகளை எழுதக்கூடாது என்று இலக்கிய விசாரத்தின் முன்னுரையில் அவர் எழுதியுள்ளார்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்(பாகம்-7)-kathir ...

Image