Posts

Showing posts from May, 2013

அலைகள்

Image
யாவும் மாறிவிட்டன . அலைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன . ஆளேதும் இல்லாவிட்டாலும் அசைந்துகொண்டே

நேர்மை சௌந்தர மகாதேவன்

Image
சூதும் வாதும் கோதும் வாழ்வை நேர்மை ஒன்றே தடுக்கும் தாழ்வை . சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

வீட்டின் விழிகள் சௌந்தர மகாதேவன்

Image
வீட்டின் விழிகள் அறியும் . தூக்கத்தையும் துக்கத்தையும் . சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

தாமிர பரணி சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Image
மாறிக்கொண்டிருக்கின்றன யாவும் . மார்க்கெட் முதல் மயானம் வரை . நண்பகல் நேரம் தபால் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிச்சா தாத்தா மின்னஞ்சலுக்கு மாறி ஓர் மாமாங்கம் ஆயிற்று   . மோர்த்   துளிவிட்டுச் ராசம்மா அக்கா மோர்க் கணக்கைச்    சுவற்றில் எழுதி வைத்த இடத்தில் இன்று ஹட்சன் ஸ்டிக்கர்கள் . சத்திரம் நிறுவிச்   சாப்பாடு போட்ட நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் நியான் மின் பலகைகளுடன் சென்னை நகைக் கடைகள் இன்னும் மாறாதிருப்பது அழுக்குகளை அள்ளிவீசினாலும் எல்லோர்க்கும் பொதுவாய் அன்போடு நகர்கிற தாமிர பரணி மட்டும்தான் . சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி  

மனிதம்

Image
……… மணல் தேடி அலைகிற அலைகள் . மனம் தேடி அலைகிற கலைகள் . பணம் தேடி   அலைகிற தலைகள் . இவற்றைத் தினம்   தேடி   அலைகிற நிலைகளில் ரணமாகிப் போனது மரணத் தருவாயில் மனிதம்