மாறிக்கொண்டிருக்கின்றன யாவும் . மார்க்கெட் முதல் மயானம் வரை . நண்பகல் நேரம் தபால் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிச்சா தாத்தா மின்னஞ்சலுக்கு மாறி ஓர் மாமாங்கம் ஆயிற்று . மோர்த் துளிவிட்டுச் ராசம்மா அக்கா மோர்க் கணக்கைச் சுவற்றில் எழுதி வைத்த இடத்தில் இன்று ஹட்சன் ஸ்டிக்கர்கள் . சத்திரம் நிறுவிச் சாப்பாடு போட்ட நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் நியான் மின் பலகைகளுடன் சென்னை நகைக் கடைகள் இன்னும் மாறாதிருப்பது அழுக்குகளை அள்ளிவீசினாலும் எல்லோர்க்கும் பொதுவாய் அன்போடு நகர்கிற தாமிர பரணி மட்டும்தான் . சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி