Posts

Showing posts from May, 2017

வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர்: நா.காமராசன்

Image
வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர் : நா.காமராசன் ....................................................................................................................... பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி நா.காமராசனின் தாக்கமில்லாமல் கவிதை எழுதிவிட முடியாது என்ற அளவு அழுத்தமாகத் தடம்பதித்த வானம்பாடிக் கவிஞர்.  மரபில் தொடங்கி நவீனக் கவியுலகில் தடம்பதித்த நா.காமராசன் படைத்த பெரியார் காவியம் இன்றும் மாணவர்களுக்குப் பாடநூல். மிகக் கூர்மையான சொல்லாடலும் தமிழ்மொழிமீதான பற்றும் அவர் படைப்புகளின் ஊற்றுக்கண்.  யாராலும் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மாந்தர்கள் இவரின் பாட்டுடைத்தலைவர்கள். திருநங்கையர் குறித்து அப்போதே காகிதப் பூக்கள் என்று கறுப்புமலர்களில் பதிவுசெய்த படைப்பாளர் நா.காமராசன். “ காலமழைத் தூறலிலே களையாய்ப் பிறப்பெடுத்தோம்/ தாய்ப் பாலின் சரித்திரத்தில்/சதுராடும் புதிரானோம்/விதை வளர்த்த முள்ளானோம்/விளக்கின் இருளானோம் ” என்று கண்ணீர்வரப் பாடியவர் நா.காமராசன்.  கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராவும் வானம்பாடிக் கவிஞராகவும் இந்திமொழிக்கெத

ம.சக்தி வேலாயுதம் அவர்களின் நீங்களும் கிடைப்பீர்கள் நூல் வெளியீட்டு விழா...

Image
https://www.youtube.com/watch?v=ybXFr5WqGJc&feature=shar

21.5.2017 தி இந்து தலையங்கத்தை முன்வைத்து

Image
21.5.2017 தி இந்து தலையங்கத்தை முன்வைத்து             வலைப்பூ எனும் இணைய சிலேட்டு பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சமூக ஊடகங்களில் வலைப்பூக்கள் குறித்த தலையங்கம் நியாயமான கவலையை முன்வைத்தது. முகநூலும் டுவிட்டரும் வந்தபின்னர் வலைப்பூவில் எழுதும் பதிவர்களின் எண்ணிக்கைக் குறைந்துபோனது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலைப் பூக்களில் எழுதிவரும் நான் ஒருங்குறியில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டதே வலைப்பூ உருவாக்கியபின்தான். வலைப்பூ இணையப் பதிவர்களுக்கு எழுதிப்பழகும் சிலேட்டாகத் திகழ்கிறது. நாம் எழுதிய எழுத்துகளை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தும் கலமாகவும் திகழ்கிறது. உரியகுறிச்சொற்களோடு நாம் வலைப்பூக்களில் சேமித்துவைக்கும் நம் கட்டுரைகளைத் தேடுபொறிகள் உரியவர்களுக்கு எடுத்து அழகாகத் தந்துவிடுவதால் நமக்கான எழுத்தறிமுக அட்டையாகவும் திகழ்கிறது. காலவரிசையில் இணையம் நம் படைப்புகளைச் சேமித்து வைத்திருப்பதால் அவற்றைத் தொகுப்பதும் நூலாக மாற்றுவதும் வெகுஎளிதாக அமைகிறது.  நமக்குப் பிடித்த வலைப்பதிவுகளை நம் கவனத்திற்குக் கொண்டுவந்து வாசிக்கத் தூண்டுகிறது. நம்முடைய இணையப்பதிவு உலகாளா

தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி

Image
திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்திய மௌனி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கம்        தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து தமிழ்ச்சிறுகதைகளின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியாகத் தடம்பதித்த எழுத்தாளர்கள் மௌனி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கத்தினை மே 17 மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை சைவசபையில் நடத்தின. மதிதா இந்துக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு தலைமையுரையாற்றினார். முதல் அமர்வு: முதல் தமிழ்ச்சிறுகதை பிறந்து 2017 ஆம் ஆண்டோடு நூறாண்டுகள் ஆகும் இந்த நாளில் மேலும் இலக்கிய அமைப்பு இந்த நூறாண்டுகளில் தடம்பதித்த தமிழ்ச்சிறுகதையாசிரியர்கள் குறித்த தொடர்சொற்பொழிவுகளை நடத்திவருகிறது. அந்தவகையில் தமிழ்ச்சிறுகதையுலகில் தடம்பதித்த எழுத்தாளரான மௌனியின் மணிக்கொடிச் சிறுகதைகள் எனும் தலைப்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலை

சக்திவேலாயுதம் கவிதைகள்

Image
               கவிதை எனும் பூங்காற்று                                   முனைவர் சௌந்தர மகாதேவன்,                                   தமிழ்த்துறைத்தலைவர்,                                   சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,                                   திருநெல்வேலி, 9952140275 எழுத்து ஆன்மாவின் நுண்மொழி. அது எப்போதும் கிளம்பிவரும் கடலலை அன்று,  எப்போதோ வெளிக்கிளம்பும் புதுப்புனல். எழுத்து சுயஅனுபவத்தின் திரட்சி, மொழியின் சுருக்கெழுத்து. சுபமங்களா நேர்காணலில் எழுத்தாளர் திரு. வண்ணநிலவன், “ இலக்கியம் என்பது சங்கீதம் ஓவியம் மாதிரி கலை சம்பந்தப்பட்டதுதான். இது வாழ்வு சம்பந்தப்பட்டது என்கிறோம். இதில் நாட்டுப் பிரச்சனையோ வீட்டுப் பிரச்சனையோ இருக்கலாம். சமூகப் பிரச்சனையைச் சொல்வதுதான் அதற்கு அளவு என்று சொல்லமுடியாது. இலக்கியத்தில் முதலும் முடிவுமானது ரசனைதான்” என்று சொன்னார். ரசனை இல்லாமல் இலக்கியம் படைக்கவோ படிக்கவோ முடியாது. இளையதலைமுறை தங்கள் ரசனையைப் பதிவுசெய்ய, தங்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்ய, தங்கள் விருப்பை வெறுப்பைப் பதிவுசெய்ய தேர்ந்த மொழிநடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது

பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

Image

“தமிழ்இலக்கியத்தின் புண்ணியபூமி திருநெல்வேலி மண்” நாவாலாசிரியர் பொன்னீலன்

Image
     “ தமிழ்இலக்கியத்தின் புண்ணியபூமி திருநெல்வேலி மண்” நெல்லை கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவாலாசிரியர் பொன்னீலன் பேச்சு     ம.சக்திவேலாயுதத்தின் “நீங்களும் கிடைப்பீர்கள்” எனும் கவிதைநூல் வெளியீட்டுவிழா பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் அரங்கில் 14.5.2017 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது. தாணப்பன் வரவேற்றுப் பேசினார்.திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட வங்கிஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் ரா.ரெங்கன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவாலாசிரியர் பொன்னீலன் ம.சக்திவேலாயுதத்தின் “நீங்களும் கிடைப்பீர்கள்” எனும் கவிதைநூலை வெளியிட தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பேராசிரியர் தோத்தாதிரி அந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் நூல்குறித்த திறனாய்வுரையில் “மொழியின் சுருக்கெழுத்து கவிதை, கிழிந்துபோன சமூகத்தைத் தைக்கும் ஊசி கவிதை. சமீபகாலமாக நெல்லையிலிருந்து இளையதலைமுறைக் கவிஞர்கள் மிக அழகாக எழுதத்தொடங்கியிருகிறார்கள்” என்று பேசினார். தமி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

Image
              மே-15 உலகக் குடும்பதினம்               நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் , தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி 9952140275 http://www.dinamalar.com/news_detail.asp?id=1770821 உலகம் மிகப்பெரிய உறவுக்கூடம். அன்பின் ஆலயம். தனியே பிறந்த நாம் குடும்ப உறவுகளோடு சமூகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வலியோடும் வலிமையோடும் வாழக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமாகக் குடும்பம் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நகரீகத்தின் போக்கில் போவதாய் உலகம் நினைத்துக் கொண்டு நிம்மதியை இழந்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில் தமிழகத்தின் குடும்பங்களில் நிறைவு தவழ்ந்து கொண்டிருக்கிறது. பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். தாத்தா பாட்டி, அப்பா அம்மா, சித்தி சித்தப்பா, அத்தை மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச்சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப் பயணம் எவ்வளவு சுவாரசியமானது! திருக்கடையூரில் எண்பதுவயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திக

மாற்றுத் திறனாளிகள்: பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

Image
உலக மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புக்கட்டுரை டிசம்பர் 3 “குறையொன்றுமில்லை..”- சிரமம் தாண்டிய சிகரங்கள் ....................................................................................................................... பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி mahabarathi1974@gmail.com 9952140275 காலம் அவிழ்த்துப் போடும் புதிர் விந்தையாகத்தான் இருக்கிறது. கண் வலிக்காரர்களைக் கண்டவுடன் ஒதுங்குகிற நாம் அவநம்பிக்கைக்காரர்களை அருகில் வைத்திருக்கிறோம்.அவநம்பிக்கையைப் புறந்தள்ளி நம்பிக்கையின் அடையாளமாய் திகழும் சிரமம் தாண்டிய சிகரங்கள் சிலரை இந்த நாளில் நினைப்பது இனிமையானது.  அனைத்து உறுப்புகளும் பெற்றிருந்தும் மனவலிமையில்லாதவர்களுக்கு மத்தியில் ஓரிரு புலன்கள் அதன் பணியைச் செய்யாவிட்டாலும்கூட மனஉறுதியோடு மாற்றுத்திறனை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாய் தடம்பதித்து வரலாற்றில் இடம்பிடித்த மாற்றுத்திறனாளிகள் மகத்தான சாதனையாளர்கள்; பிரியத்தைப் பிரியமாகப் புரியவைப்பதில்தான் வாழ்க்கை வாழ்கிறது.

சிந்தை மயக்கும் சிங்கப்பூர் என்கிற சொர்க்கபுரி: சௌந்தர மகாதேவன்

Image
என் பார்வை: ஆகஸ்ட் 8,2015 சிங்கப்பூர் பொன்விழா      சிந்தை மயக்கும் சிங்கப்பூர் என்கிற சொர்க்கபுரி முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வே லி, 9952140275 mahabarathi1974@gamil.com      சிங்கப்பூர் என்கிற பூலாக சொர்க்கம் இந்த ஆகஸ்ட்மாதம் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. மலேசியாவில் நடந்த ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பயணங்கள் நம்மைப் பக்குவப்படுத்திவிடும். தண்ணீரில் மிதக்கும் வெண்ணைக்கட்டிமாதிரிக் கண்ணீரில் மிதக்கும் மனிதர்களைப் பயணம் பக்குவப்படுத்துகிறது. உம்மென்ற முகத்தோடு புத்தகங்களுக்குள் புதைந்து பயணிக்கும் இறுக்கமான பயணியைக்கூட, உடன் பயணிக்கும் ஒரு சிறுகுழந்தை சிந்தும் சிறுபுன்னகை சிதறடித்து இயல்பாக்கிவிடும். அல்வா சாப்பிட்டுவிட்டு நாம் தூரப்போட்ட வாழைஇலை இன்னும் அடர்த்தியான பச்சையைத் தனக்குள் காட்டுவதுபோலப் பயணங்கள் நம்மை இன்னும் பசுமையாக வைத்திருக்கின்றன.முருங்கை மரத்தை ஒடிக்க வெறும்கரங்கள் போதும்,ஆனால் தேக்கை உடைக்கப் பல கைகளாலும் முடியாது.