Posts

Showing posts from November, 2016

தினமலர் என் பார்வை :குழந்தைகள் தின சிறப்புக் கட்டுரை சௌந்தர மகாதேவன்

Image
http://www.dinamalar.com/news_detail.asp?id=1648939

திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வு

Image
திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து பாளையங்கோட்டை சைவசபையில் 16.11.2016 புதன்கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வை நடத்துகின்றன. உலக கிளாசிக் நாவலான காபிரியேல் கார்சியா மார்க்கேஸின் “ முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நா.ஜிதேந்திரன் உரையாற்றுகிறார். நூற்றாண்டு கண்ட தமி ழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர் லா.ச.ராமாமிர்தம் படைப்புலகம் குறித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் “லா.ச.ரா.- நெருப்பில் பூத்த பனித்துளி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். படைப்பிலக்கியக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தும் நோக்கில் பேராசிரியர் மேலும் சிவசு “ படைப்பாளி – படைப்பு – வாசிப்பாளி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.  நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் மேலும் சிவசுவின் செல்பேசியில் ( 94432 17804) பேசி பெயர்ப்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பபின் செயலாளர் பேர