திருநெல்வேலி சௌந்தர மகாதேவன் கவிதை



தனக்குத்தானே
.................................
தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறான்
 கூச்சமில்லாமல் ஒருவன்.
தன்னைத்தானே செல்பிப் படம்
 எடுத்துக்கொள்கிறான்
தன்போதையில் மற்றொருவன்.
தன்னையே நொந்துகொள்கிறான்
 இழந்தசோகத்தில் பிறிதொருவன்.
தன்னைத் தானே சாட்டையால்
 அடித்துக்கொள்கிறான் தாங்கமுடியா
 பசியின் வலியால் இன்னொருவன்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்
யாருமற்றுப்போன வேறொருவன்.
இப்படி யாரைப்பற்றிய கவலைகளுமின்றி
 அவரவர் அவரவரோடு போய்விட்டதால்
தானே செய்ய வேண்டியிருக்கிறது
தன்னையே தூக்கிநடப்பது உட்பட யாவற்றையும்.
*
சௌந்தர மகாதேவன்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்