திருநெல்வேலி மேலும் இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வு
திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும்
இலக்கிய அமைப்பு மற்றும் மேலும் வெளியீட்டகம் இணைந்து பாளையங்கோட்டை சைவசபையில்
16.11.2016 புதன்கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியக் கோட்பாடுகள் அறிமுக நிகழ்வை
நடத்துகின்றன.
உலக கிளாசிக் நாவலான காபிரியேல் கார்சியா
மார்க்கேஸின் “ முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்” நாவலை சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நா.ஜிதேந்திரன் உரையாற்றுகிறார்.
நூற்றாண்டு கண்ட தமிழின் குறிப்பிடத்தக்க
படைப்பாளர் லா.ச.ராமாமிர்தம் படைப்புலகம் குறித்து பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் “லா.ச.ரா.- நெருப்பில்
பூத்த பனித்துளி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
படைப்பிலக்கியக் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தும்
நோக்கில் பேராசிரியர் மேலும் சிவசு “ படைப்பாளி – படைப்பு – வாசிப்பாளி” எனும்
தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் மேலும்
சிவசுவின் செல்பேசியில் ( 94432 17804) பேசி பெயர்ப்பதிவு செய்துகொள்ளலாம் என்று திருநெல்வேலி
மேலும் இலக்கிய அமைப்பபின் செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் அறிக்கைமூலம்
தெரிவித்துள்ளார்.
ச.மகாதேவன்,
செயலாளர்
மேலும் இலக்கிய அமைப்பு
Comments
Post a Comment