எப்போதும்எந்திரமே

எந்திரத்திற்கும் எனக்குமான தொடர்பில்
எப்போதும்எந்திரமே என்னை ஆளமுயல்கிறது
மூளையின் இருப்பு பன்மடங்குபெருகிய
 நினைவுச்சில்லாகப் படுகிறது இப்போது எனக்கு.
அத்திரிப்பட்சா கொழுக்கட்டையை
நினைவுபடுத்துவதாய் அமைகின்றன
சில நேரங்களில் என்செயல்களும்.
எந்திரத்திற்கும் எனக்குமான உரையாடல்
ஏற்கனவே நிரல்படுத்தப்பட்டபடியே நடக்கின்றன.
அவை பெரும்பாலும்
 கொள்குறிவினாக்களாகவே அமைகின்றன.
அங்கே புனைவுகளுக்கு இடமில்லை
புரிதல்களுக்கு வழியில்லை.
எதையோ தேடப்போய் எங்கோ கொண்டுவிடும்
தேடுபொறிகளாய் என்மனமும் இப்போது எந்திரத்திரமாய்..

சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்