சுந்தர சுதந்திரம் -சௌந்தர மகாதேவன்
பழுதாகிப் பழுப்பானது
அந்த மழைநாளின் பகலும்.
மூடிய கண்ணாடிச்சன்னல் வழியே
துணிச்சலாய் உள்நுழைந்து
கண்ணைப் பறித்தது
மின்னலும் இன்னலாய்.
கொட்டும் மழையின் இன்னிசை
எட்டும் செவிகளில் என்றாவது.
மழைத்துளி வழியும் விரல்கள்
மகத்துவமாய் தெரியும்
கதவும் மனதும்
அடைத்து உட்புறத்தில் நானும்
வெளியே சுந்திரமாய் மழையும்.
*
சௌந்தர மகாதேவன்
Comments
Post a Comment