ஒரு ரூபாய் கோழிக்குஞ்சு





பாளையங்கோட்டை
சேவியர் பள்ளி வாசலில்
ஆறாப்பு முழு ஆண்டுத் தேர்வு
முடித்த மகிழ்ச்சியில் நின்றிருந்தபோது
அட்டை அரணில்
கீச்... கீச்... சத்தத்தோடு ஒன்றன்மீது ஒன்றாய்
அங்குமிங்கும் அலைந்த
கலர் கோழிக் குஞ்சுகள்
கண்ணை ஈர்த்தன.

பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய்க்குப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சு கிடைத்தது
வீட்டிற்குக் கொணர்ந்து
தலையில் வைத்து ஆடி மகிழ்ந்து
உண்ணக் குருணை தந்து
உறங்கிப் போனேன்

விடியும் போது
விரைந்து கிடந்தது
அந்த வண்ணக் கோழிக்குஞ்சு
உணர்ந்த முதல் நாளும் அதுவே.

காய்கறிச் சந்தைக்குப் போகும்வழியில்
கம்பிக் கூண்டுகளில் வைத்துக்
கோழிக் கடைகளில் இறக்கப்படும்
பிராய்லர் கோழிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
பரிதாபமாகச் செத்த அந்தப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சின்
விரைத்த உடலே
நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகிறது

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்