தாமிர பரணி சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி
மாறிக்கொண்டிருக்கின்றன
யாவும் .
மார்க்கெட் முதல் மயானம் வரை .
நண்பகல் நேரம் தபால் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் கிச்சா தாத்தா
மின்னஞ்சலுக்கு மாறி
ஓர் மாமாங்கம் ஆயிற்று .
மோர்த் துளிவிட்டுச்
ராசம்மா அக்கா
மோர்க் கணக்கைச் சுவற்றில்
எழுதி வைத்த இடத்தில் இன்று
ஹட்சன் ஸ்டிக்கர்கள் .
சத்திரம் நிறுவிச் சாப்பாடு போட்ட
நெல்லையப்பர் நெடுஞ்சாலையில்
நியான் மின் பலகைகளுடன்
சென்னை நகைக் கடைகள்
இன்னும் மாறாதிருப்பது
அழுக்குகளை அள்ளிவீசினாலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
அன்போடு நகர்கிற
தாமிர பரணி மட்டும்தான் .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
யாவும் .
மார்க்கெட் முதல் மயானம் வரை .
நண்பகல் நேரம் தபால் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் கிச்சா தாத்தா
மின்னஞ்சலுக்கு மாறி
ஓர் மாமாங்கம் ஆயிற்று .
மோர்த் துளிவிட்டுச்
ராசம்மா அக்கா
மோர்க் கணக்கைச் சுவற்றில்
எழுதி வைத்த இடத்தில் இன்று
ஹட்சன் ஸ்டிக்கர்கள் .
சத்திரம் நிறுவிச் சாப்பாடு போட்ட
நெல்லையப்பர் நெடுஞ்சாலையில்
நியான் மின் பலகைகளுடன்
சென்னை நகைக் கடைகள்
இன்னும் மாறாதிருப்பது
அழுக்குகளை அள்ளிவீசினாலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
அன்போடு நகர்கிற
தாமிர பரணி மட்டும்தான் .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
Comments
Post a Comment