சௌந்தர மகாதேவன் கவிதை
பொறுத்தல் என்பதில்லை
பேரிடியாய் பெருமழையாய் சிலகணங்கள்
ஏற்கஇயலா இயலாமையோடு
சிலகணங்களில் சீறும்
சினவார்த்தைகள் கூறும்.
உயிரற்ற சடங்களோடு
அமர்க்களமாய் தெரியும் சிலகணங்களில்.
குத்திக்கிழிக்கிற கத்தியாகிறது
சில நாட்களில் நாவுகளும்
அவை தரும் நோவுகளும்.
முள்வேலியிட்ட முகப்பரப்பில் சிலகணங்களில்
தேளும்வேலியிடுகிறது விடக்கொடுக்கால்.
வன்பிரளயங்களைப் பின்பற்றி நடக்கின்றன
அத்தனை வார்த்தைக் கால்களும்.
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
Comments
Post a Comment