சிறை ...........சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



தொட்டிமீன்களைப்பார்ப்பதில்
அவருக்கு அப்படி ஒருமகிழ்ச்சி.
அலையும் இல்லாத குட்டிக்கடலில்
அலையும் அதன் கலையைப் பார்ப்பதை
அவர் தியானமென்று சொல்லியிருக்கிறார்
ஒருவருமற்ற ஒரு தனிமைப்பொழுதில்.
தொட்டிக்குள் வாழ்ந்தாலும் துயரமேதுமற்று
இயங்கிக்கொண்டேயிருக்கும்
அதன் இனிமையைப்பார் என்றார்
பிறிதொருநாளில்.
என் கவனம்
 அதன் இயக்கம் பற்றியோ
பொன்நிறமேனி பற்றியோ அல்லாமல்
அதன் கண்ணாடிச்சிறை
குறித்தே என் கவலை அமைந்தது.



Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்