சிறை ...........சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
தொட்டிமீன்களைப்பார்ப்பதில்
அவருக்கு அப்படி ஒருமகிழ்ச்சி.
அலையும் இல்லாத குட்டிக்கடலில்
அலையும் அதன் கலையைப் பார்ப்பதை
அவர் தியானமென்று சொல்லியிருக்கிறார்
ஒருவருமற்ற ஒரு தனிமைப்பொழுதில்.
தொட்டிக்குள் வாழ்ந்தாலும் துயரமேதுமற்று
இயங்கிக்கொண்டேயிருக்கும்
அதன் இனிமையைப்பார் என்றார்
பிறிதொருநாளில்.
என் கவனம்
அதன்
இயக்கம் பற்றியோ
பொன்நிறமேனி பற்றியோ அல்லாமல்
அதன் கண்ணாடிச்சிறை
குறித்தே என் கவலை அமைந்தது.
Comments
Post a Comment