நாவறியா நிகழ்வுகள் ...சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.
மின்சாரமற்றுப்போன நள்ளிரவில்
தீப்பெட்டிதேடப்போய் தெரியாமல்
சுவரில் முட்டிக்கொள்வதைப்போல
பேசிமுடித்தபின் நாக்கடித்துக்கொள்கிறேன்
பின்னணி தெரியாமல் இயல்பாகப் பேசிவிட்ட
சில வாக்கியங்களுக்காக.
குழந்தை குறித்துக் கேட்டதும்
சாலைக்குமாரசுவாமி கோவில் வாசலில்
கதறிஅழுத அந்தச் சகோதரி முகம்
இன்னும் கண்ணீரோடு கண்களில்..
இப்போதெல்லாம்
பெருஞ்சொற்கள் அடுக்கிப்பேசுவதைவிடச்
நாவுக்குத் தெரியுமா முந்தைய வினாடியில்
நடந்த
முன்சோக நிகழ்வுகளின் கொடுங்கதைகள்.
Comments
Post a Comment