பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு




பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 12.12.2015 அன்று காலை 11 மணிக்கு வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. 

தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்பேசினார். 
 
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன் நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார்.
 
 கல்லூரி முதல்வர் பேராசிரியர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
மருதகுளம் நேஷனல் பொறியியற் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எச்.முஜீப்ரஹ்மான் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு “ வலிமார்களின் கோமான் அப்துல்காதிர் ஜிலானி அவர்களின் எழுத்தோவியங்களில் ஏகத்துவ அகமியம்” என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவாற்றினார். 
 
மேலப்பாளையம் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.சலீம்,காயல்பட்டினம் வாவு வஜீகா கல்லூரியைச் சார்ந்த அல்ஹாஜ் வாவு எஸ்.ஏ.ஆர்.இஷ்காஹ், அரசுதவி பெறாப் பாடப்பிரிவுகளின் இயக்குனர் முனைவர் அப்துல் காதர்,கருவூலக்காப்பாளர் முனைவர் பி.ஏ.அப்துல்கரீம், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சே.சேக்சிந்தா, முனைவர் அனுசியா, பேராசிரியர் சாதிக்அலி, பேராசிரியர் மாலிகா, பேராசிரியர் குமார், பேராசிரியர் விஜயலட்சுமி, அலுவலக் கண்காணிப்பாளர் சேக், அலவலக மேலாளர் காதர் அவுலியா ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அ.மு.அயூப்கான் நன்றி கூறினார்.






படத்தில்:  பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவில் மருதகுளம் நேஷனல் பொறியியற் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எச்.முஜீப்ரஹ்மான் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக்,கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன், அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்