உலகளாவிய அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகருக்குத் திருநெல்வேலி “மேலும்” அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது

உலகளாவிய அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ் இலக்கிய விமர்சகருக்குத் திருநெல்வேலி மேலும்அறக்கட்டளையின் சார்பில் ஒருலட்சரூபாய் விருது

 பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன். (70) எண்பதுகளில் மேலும்”  என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர்.
படைப்புலகக் கருத்தரங்குகள்
வல்லிக்கண்ணன்வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும்” வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினைத் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும்கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்திக் கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறையோடும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையோடும் எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புலகக் கருத்தரங்கினை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரித் தமிழ்த்துறையோடும் இணைந்து நடத்தியவர்.
மேலும்இலக்கிய அமைப்பு
தமிழகத்தின் சிறந்த இலக்கிய விமர்சகருக்கான மேலும்” இலக்கிய விமர்சகர் விருதினை நான்காண்டுகளாக வழங்கிவருகிறார். கடந்த ஆண்டுமுதல் சிறந்த இளம்படைப்பாளர் விருதையும் வழங்கிவருகிறார்.

தன்னிடம் சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்ற தன் மாணவர்கள் வே.கட்டளை கைலாசம்சௌந்தர மகாதேவன்,ஜீதேந்திரன் ஆகியோருடன் இணைந்து மேலும் இலக்கிய அமைப்பை ஐந்தாண்டுகளுக்கு முன்தொடங்கி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் பாளையங்கோட்டை சைவசபையில் நவீனத் தமிழ்இலக்கியக் கருத்தரங்குகளை நடத்திவருகிறார். பெங்களூரில் இருக்கும் திறனாய்வாளர் தமிழவனுடன் இணைந்து சிற்றேடு எனும் காலாண்டிதழை நடத்தி தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறார்.
இலக்கிய நிகழ்வுகள்
மண்சார்ந்த இலக்கியங்களை மண்சார்ந்த இடங்களில் சென்று பேசுவோம் என்கிற திட்டத்துடன் திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதிக்கரையோரம் வண்ணதாசனுடன் அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற சிறுகதைத்தொகுதியான ஒரு சிறுஇசை” நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை சனவரி 5, 2017 இல் நடத்தினார். “நெஞ்சினிக்கும் நெய்தல்” என்ற பொருளில் நெய்தல் சார்ந்த இலக்கிய நிகழ்வை திருச்செந்தூர் மணப்பாடு கடற்கரையில் ஜூன்,10,2017 இல் நடத்தினார்.

ஒரு லட்சரூபாய் பரிசுத்தொகை
கடந்த மாதம் அவர் குடும்பத்தார் சார்பில் திருநெல்வேலியில் “மேலும் அறக்கட்டளை” உருவாக்கப்பட்டு உலக அளவில் சிறந்து விளங்கும் சிறந்த தமிழ்இலக்கிய விமர்சகருக்கு வரும் ஜூன் 29,2018 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் மேலும்அறக்கட்டளையின் சார்பில் மேலும்தமிழ் இலக்கிய விமர்சகர் விருதும் ஒரு லட்சரூபாய் பரிசுத்தொகையும் திருநெல்வேலியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பேராசிரியர் மேலும் சிவசு தெரிவித்துள்ளார்.

விருதுக்கான பரிந்துரைகள்
2015 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறந்த தமிழ்இலக்கிய விமர்சகராகப் பங்களிப்பு செய்துள்ள தமிழ்இலக்கிய விமர்சகர்கள் குறித்த விபரத்தை, பேராசிரியர் “மேலும்” சிவசு, 9,ரயில்வே ஸ்டேஷன் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் 627 002 எனும் முகவரிக்கோ அல்லது sivasu60@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பேராசிரியர் சிவசு அவர்களின் செல்பேசி எண்ணிலோ (9443717804) உடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு மேலும் இலக்கிய அமைப்பின்  நிறுவனர் மேலும் சிவசு, மேலும் இலக்கிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், மேலும் இலக்கிய அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

         பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி, 9952140275





Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்