செப்டம்பர்- 5 ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை பாடம் நடத்துபவர் ஆசிரியர், பாடமாய் நடப்பவர் நல்லாசிரியர். வழிகாட்டியாய் திகழ்பவர் ஆசிரியர், வாழ்ந்துகாட்டியாய் வாழ்பவர் நல்லாசிரியர். பெற்றெடுத்ததற்காகப் பெற்றோருக்கு நன்றி சொல்லும் நாம், எழுத்தறிவித்ததற்காக அகிலம் போற்றும் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். தாய் ஈன்று புறந்தந்து தந்தையைக் காட்டுகிறாள், தந்தை, அறிவின் ஊற்றாயிருக்கும் ஆசிரியரை அடையாளம் காட்டுகிறார், அந்த உன்னதமான ஆசிரியரே தெய்வத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறார். அறியாமை இருளை அகற்றி அறிவு தீபத்தை ஏற்றிவைக்கும் நற்பணியை ஆசிரியர்களே செய்கிறார்கள். ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கின்றன. ஏணி அனைவரையும் ஏற்றிவிட்டு இருந்த இடத்திலே இருக்கும், தோணி அனைவரையும் கரையேற்றிவிட்டுத் தண்ணீருக்குள்ளேயே மிதந்துகொண்டிருக்கும், அண்ணாவி என்கிற ஆசிரியர் தம் மாணவரைச் சனாதிபதியாக உயர்த்திவிட்டாலும் மிக அடக்கமாக அதே பள்ளியில், அதே வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருப்பார்,
மே-15 உலகக் குடும்பதினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் , தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி 9952140275 http://www.dinamalar.com/news_detail.asp?id=1770821 உலகம் மிகப்பெரிய உறவுக்கூடம். அன்பின் ஆலயம். தனியே பிறந்த நாம் குடும்ப உறவுகளோடு சமூகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வலியோடும் வலிமையோடும் வாழக் கற்றுத் தரும் பல்கலைக்கழகமாகக் குடும்பம் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நகரீகத்தின் போக்கில் போவதாய் உலகம் நினைத்துக் கொண்டு நிம்மதியை இழந்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில் தமிழகத்தின் குடும்பங்களில் நிறைவு தவழ்ந்து கொண்டிருக்கிறது. பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். தாத்தா பாட்டி, அப்பா அம்மா, சித்தி சித்தப்பா, அத்தை மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச்சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப் பயணம் எவ்வளவு சுவாரசியமானது! திருக்கடையூரில் எண்பதுவயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திக
அனுபவம் எனும் அற்புதஆசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி, 9952140275 வாழ்க்கை கற்றுக்கொடுக்கும், அனுபவம், நாம் கற்றுக்கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும். அனுபவம், முதிர்ச்சியின் அடையாளம், அதிர்ச்சிகள் வராது தடையாளும் கருவூலம். மழைநாளுக்குப் பிறகு மண்ணைத் துளைத்து வெளியேறும் மண்புழுவைப் போல் தன்னைத் துளைத்துத் தன் சுயத்தைக் காட்டும் விஸ்வரூப விருட்சம் அனுபவம். சல்லடையை வைத்து சமுத்திரத்தைச் சலிக்க முடியுமா? அனுபவத்தைப் புறந்தள்ளி யாராவது சாதிக்க முடியுமா? நினைவுப் பாம்புகள் புலப்பப் புற்றிலிருந்துதான் புடைதேடி வருகின்றன. அனுபவசாலிகள் என்றும் புலம்பலை மறந்த புத்திசாலிகளாகவே திகழ்கிறார்கள்.நம் அனுபவங்களை முதலீடாக்கி நம் முயற்சியை நாம் தொடங்கினால் என்ன? சிக்கல் களையும் சிறப்புமருத்துவர் கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்கிறது. தேவையற்றதைத் தேவையில்லாத நேரத்தில் வாங்கினால் தேவையானதை விற்கவேண்டிவரும் என்று கற்றுத்தரும் ஆசான் அனுபவமே. நம் செயல்களை நிறுக்கும் அரூபத் தராசு அனுபவம். பேச
Comments
Post a Comment