பனை இணை ,சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி





பரியா மருதபட்டிப் பனைதேரியில்
நொங்கு நோண்டித் தின்ற
பெருவிரலின் நகக்கணுவில் இன்னும்
ஈரம் மிச்சமிருக்கிறது
அப்புறம் ஓட்டிய நொங்கு வண்டியின்
பளபளப்பு கண்களின் ஓரம் இன்னும்
மிச்சமிருக்கிறது.

விடுமுறைக்குப் போன புதுப்பட்டிப்பாட்டி
வீட்டுப் பனையோலைக் குடிசை
இன்றும் வாழநினைக்கும் வசந்தசொர்க்கம்

வாசக் குளிர்ச்சியால் மனதை வருடிய
பனையோலை விசிறிக் காற்று

தொட்டிலைச் சுமந்த உத்திரம்
நிலத்தைப் பதிந்துவைத்த பனையோலைப் பத்திரம்

யாவும் பனைதான்
யாவும் பனைதான்
என்றும் நம் மானுடத்தின்
இன்பியல் இணைதான்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்