திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் நடத்திய தேசிய நூலக வாரவிழாவில் பாளை. பேராசிரியர் சௌந்தர மகாதேவனுக்குப் பாராட்டு




திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் 18.11.2015 அன்று 6 மணிக்கு நடத்திய தேசிய நூலக வாரவிழாவில் பாளை. பேராசிரியர் சௌ. மகாதேவனுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
 
பாரதப் பிரதமரின் தேசிய விருது மற்றும் மத்திய அரசின் தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழ் பெற்றவர், 

மலேசியா நாட்டில் மலேயாப் பல்கலைக்கழகம் நடத்திய நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் இருநூல்களை வெளியிட்டவர் 

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் சௌ.மகாதேவன். தமிழ்நாடு அரசின் பொதுநூலக இயக்ககம் திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் 18.11.2015 நடத்திய 48 வது தேசிய நூலக வாரவிழா தமிழறிஞர்கள் பாராட்டுவிழா, எழுத்தாளர், வாசகர் தினவிழாவில் சௌ.மகாதேவனின் இளையோர் மேம்பாட்டுப்பணிகளையும் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி நூலகத்துறையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப்பொன்னாடை போர்த்திப் பாராட்டு தெரிவித்தார்.



இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம்,வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை,வாசகர் வட்டச் செயலாளர் கோ.கணபதி சுப்ரமணியன்,நூலகர் முத்துகிருஷ்ணன்,எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்