உலகெங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும்



     
முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்கவேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிறைவேற்றி வருகிறார்கள் என்பதை அரவிந்தனின் “ தமிழுக்கு ஓர் இருக்கை” கட்டுரை உணர்த்தியது.ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரும்பாடுபட்டுவரும் ஜானகிராமன்,சம்பந்தன் இருவரையும் அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகளோடு கட்டுரையாளர் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
 
உணர்ச்சிக் கோஷங்களைத் தாண்டி ஆயிரமாயிரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு,கோவில் ஆய்வுகள்,பண்பாட்டு ஆய்வுகள்,நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகப் புலனாகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவி ஆண்ட்ரியா குட்டியர்ஸ் திருச்சியில் தங்கி தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை களஆய்வு செய்துவருகிறார். 

மலேயாப் பல்ககலைக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கடந்த ஜனவரியில் கிடைத்தது.அப் பல்கலைக் கழகத்திலும் இந்திய ஆய்வியல் துறையின் ஒரு பகுதியாகவே தமிழ்த் துறை செயல்படுகிறதேயன்றித் தனித்துறையாகச் செயல்படவில்லை.சிங்கப்பூரில் இன்னும் ஒருபடி மேலாகத் தமிழ்த்துறைக்கு ஆதரவு கிடைக்கிறது. 

இந்திய மொழிகள் துறையாகவோ,தெற்காசிய மொழிகள் துறையாவோ தமிழ் ஈற்றம் பெற்றிருந்தாலும் வருங்காலத்தில் அது போதுமானதாய் இருக்கப்போவதில்லை. தமிழ் உயர்தனிச்செம்மொழி என்று தமிழ்நாட்டுக்குள் சொல்லிக்கொண்டிருப்பதைவிட உலகப்பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் தமிழ்த்துறைகள் தனியே உருவாக்கப்பட்டு உலகாளாவிய அளவில் தமிழ் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அப்பல்கலைக் கழகங்களில் ஆய்வுகளோடு புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுத்தரவேண்டும்.

 அந்த நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள் எழுதிய தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அப்பல்கலைக் கழகங்களால் பதிக்கப்படவேண்டும். 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் தொடர்ச்சியும் உடைய நம் தமிழ் மொழியை வளர்க்க நாம் முயலாவிட்டால் வேறு யார் முயல்வது?




Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்