யாவும் சாவும்





அவனுக்கு எந்த உணர்வுகளையும்
வெளிக் காட்டத் தெரியாது.
மேசை மீது கிடத்தப்படும்  உடல்கள்,
நசுங்கிய, , உப்பிய உடல்கள்
எல்லாவற்றையும் அவன்
ஒன்று போலவே பாவிப்பான்

வாசல் ஓலங்களும்,
விபத்தின் கோலங்களையும்
அவன் ஒரு பொருட்டாய் மதித்ததில்லை

உறுப்புகளை மருத்துவர் அறுத்தெடுத்து
அறுத்தெடுத்துத் தரக் குதப்பிய
வெற்றிலையோடு அவன்
திரவத்தில் மிதக்க வைப்பான்

பாயில் சுருட்டி அவன்
அமரர் ஊர்தியில் ஏற்றும் போதும்
கலங்கியதில்லை.

பிறந்த யாவும் சாவும் என்ற
பேருண்மையை உணர்ந்த
பிறவி ஞானியவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்