உயரத்திலிருப்பவன்





அரைசாண் வயிற்றுக்காக அவன்
அந்தரத்தில் செல்பேசிக் கோபுரம்
கட்டிக் கொண்டிருக்கிறான்.
அவன் வயிறு வானத்திற்கருகே
சுருங்கிக் கிடக்கிறது.

உயரே ஏற ஏற அதளபாதாளம் நோக்கி
இறங்குகிறது அவன் உடலும் குடலும்

பள்ளத்தில் கிடக்கும் அவர்கள் வாழ்வதற்காக
சாவின் உயரத்தைச் சந்தித்துத் திரும்புகிறார்கள்.

செல்பேசிக் கோபுரங்களில்,
காற்றாலை மின் விசிறிகளில்,
தொலைக்காட்சிக் கோபுரங்களில்
இருப்போரை இனி அண்ணாந்து பார்க்காதீர்கள்.

உயரத்திலிருப்பவனெல்லாம்
உயாந்திருப்பவனில்லை
என்ற உண்மை புரியும்வரை.

சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்