தமிழ்த்தேன் அருந்துக:முனைவர் ச.மகாதேவன் கவிதை





பூத்திருக்கும் மரங்களெலாம்
புவியின் புகழ்பாடக்
காத்திருக்கும்

பார்த்திருக்கும் உள்ளமெலாம்
பரவசத்தால்
வேர்த்திருக்கும்

வியர்த்திருக்கும் வான்பரப்பு
மழையாக மண்ணில்
ஈர்த்திருக்கும் வாசத்தை

கேட்டிருக்கும் குயிலோசை
மரச்சோலைதனில்
பாட்டிருக்கும் இசைக்கலைஞன்
மனம் போட்டிருக்கும்
நெஞ்சினிக்கும்
பாட்டாக…
உள்ளிருக்கும் மதுத்துளியைக் கண்டு
கள்ளிருக்கும் எனக் கருதித் தும்பிக்கூட்டம்
படையெடுக்கும் – அதன் புகழ்பாடச்
சொல்லிருக்கும் பூவுலகு உள்ளவரை
நாவில் தமிழிருக்கும்
நாலுபேர் சுமந்து செல்லும் வரை

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்