பதிவுப் பதறல்கள்





எங்கும் எப்போதும்
உற்றுநோக்கிக் கொண்டேயிருக்கின்றன
கறுமைநிறச் சுழலும் காமிராக் கண்கள்.

யாவும் பதிவு செய்யப்படுகின்றன
முன்யோசனை ஏதுமின்றி
இயல்பாய் முகத்தைக் கோணலாக்கிச் செய்யும்
மூக்குச் சொறிதல் உட்பட

ஒரு குற்றவாளியைக் குறிவைக்க – நம்
அனைவரின் அசைவுகளையும்
வெட்கமின்றிப் பதிவு செய்கின்றன
அந்த எந்திரக் கண்கள்

தொடர்வண்டி நிலையங்களில்
துணியகங்களில் பேரங்காடிகளில்
அடுக்கக மால்களின்
ஆடை மாற்றும் அறைகளில்
கோவில்களில் குளியலறைகளில்
குற்றவாளிகளைப் பார்ப்பது போல்
நம்மைக் குறுகுறுத்துப் பார்க்கிறது.

முன்பெல்லாம்
போட்டோ எடுக்கும்
காமிரா மீது போர்வை போர்த்திப்
படமெடுப்பது வழக்கம்

இப்போது போகுமிடமெலாம்
நாம் போர்வை போர்த்திப்
போவதைத் தவிர
வேறு வழியில்லை…




சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்