காற்றின் காதுகளில்…
யாருக்குத்
தெரியும்?
இழுத்துக் கொண்டு
கிடக்கிறவரின்
இறுதி நினைவு
இன்னதென்று!
யாருக்குத்
தெரியும்?
பூர்வீக விட்டை
வறுமையை எதிர்கொள்ள
விற்றுவிட்டுப்
போகிறவனின்
இறுதிப்
பார்வையின் பொருள்?
யாருக்குத்
தெரியும்?
கடத்தப்பட்ட
பள்ளிக் குழந்தையை
நாலு விலங்குகள்
சிதைத்த பின்
சொன்ன இறுதி ரணச்
சொல்
இப்படி…
யாருக்கும்
தெரியாச் சொற்கள்
உண்டு கோடானு கோடி
காற்றின் காதுகள்
மட்டுமே அறியும்
காலமானவனின்
கடைசி வார்த்தைகளை…
Comments
Post a Comment