பங்குனி உத்திரம்





பங்குனி உத்திர நாளன்று
குடும்பத்தோடு சாஸ்தாக்களை வழிபட்டு
ஆட்டுக்கிடா பலிகொடுத்து
வில்வண்டியின் பின்னால் கட்டிக்கொண்டு
வரிசையாய் திரும்புகிற அழகை
பாளை சவகர் திடலிலிருந்து
பார்த்து ரசித்திருக்கிறேன்

இன்று வீடுகளில் பொங்கித் தின்று விட்டு
ஷேர் ஆட்டோவில் கோவிலுக்கு உடனே போய்
சட்டெனத் திரும்பி வந்து
வேலைக்குப் போகும்
அவசரம் ஒவ்வொருவரிடமும்..
ஆற அமர வழிபடக் கூடமுடியாமல்
ஆறியதைத் தின்று
அடுத்த ஷிப்டுக்குத் தயாராக வேண்டியிருக்கிறது.

சாமி காப்பாற்றாத குடும்பங்களைச்
சம்பாத்தியம் தானே காப்பாற்ற வேண்டும்.


                              முனைவர். ச. மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்