ரசி . . . யாவற்றையும்





ஈரமாயிருக்கிர வரை

ஒட்டத்தான் செய்கிறது

மணலும் மனமும்.



பயமற்று பயணிக்கும் வரை

பாதங்களை வருடத்தான் செய்கிறது

அலையும் மலையும்.



இறங்கத் தயாராகிச்

சிறகுகள் விரிக்கும் வரை

மேல் பரப்பில் லேசாகவே பறக்கிறது

விமானமும் தன் மானமும்



ரசிக்கும் உள்ளம் இருக்கிறவரை

அழகாகவே சிரிக்கிறது

படித்த பள்ளியும்

சப்பாத்திக் கள்ளியும்.



இருக்கிற வரைக்கும்

வெறுப்பை மறுக்கும்

இனிய ரசனை யிருந்தால்

எதுவும் சிறக்கும்

மனம் மகிழ்ச்சியில் பறக்கும்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்