குட்டித் தொட்டில்
திருச்செந்தூர் வள்ளி குகை வாசலில்
குழந்தை வேண்டி
சிறு துணியால்
நேர்ச்சைத் தொட்டில் கட்டுகிற
சரசக்காவின் மன வலி...
”எதற்கு அந்த ஆண்ட்டி இங்கு
வந்து குட்டித் தொட்டில் கட்டுகிறாள்?”
என்று தன் தாயிடம்
அப்பாவியாய் கேட்டு நகர்கிற
சிறு குழந்தையின்
கேள்விக்குப் பின்தான்
இன்னும் அதிகமானது.
Comments
Post a Comment