வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர்: நா.காமராசன்

வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர்: நா.காமராசன்
.......................................................................................................................
பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

நா.காமராசனின் தாக்கமில்லாமல் கவிதை எழுதிவிட முடியாது என்ற அளவு அழுத்தமாகத் தடம்பதித்த வானம்பாடிக் கவிஞர்.

 மரபில் தொடங்கி நவீனக் கவியுலகில் தடம்பதித்த நா.காமராசன் படைத்த பெரியார் காவியம் இன்றும் மாணவர்களுக்குப் பாடநூல்.
மிகக் கூர்மையான சொல்லாடலும் தமிழ்மொழிமீதான பற்றும் அவர் படைப்புகளின் ஊற்றுக்கண்.

 யாராலும் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மாந்தர்கள் இவரின் பாட்டுடைத்தலைவர்கள்.

திருநங்கையர் குறித்து அப்போதே காகிதப் பூக்கள் என்று கறுப்புமலர்களில் பதிவுசெய்த படைப்பாளர் நா.காமராசன். “ காலமழைத் தூறலிலே களையாய்ப் பிறப்பெடுத்தோம்/ தாய்ப் பாலின் சரித்திரத்தில்/சதுராடும் புதிரானோம்/விதை வளர்த்த முள்ளானோம்/விளக்கின் இருளானோம்” என்று கண்ணீர்வரப் பாடியவர் நா.காமராசன்.

 கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராவும் வானம்பாடிக் கவிஞராகவும் இந்திமொழிக்கெதிராகக் களமிறங்கிய போராட்ட வீரராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் பலபரிமாணங்கள் கொண்டவர்.

எல்லாவற்றிலும் தனிமுத்திரை பதித்தவர்.இந்த நேரத்தில் அவர் எழுத்திய “ஒப்பாரிச் சாயல்” என்கிற கவிதை நினைவில் தவழ்கிறது

எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?”

போய்வருக கவிஞரே..ஆழ்ந்த இரங்கல்கள்


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்