பொய்பற்றி எரியும் கவிதைகள்
மலர்களைத் தின்பவனிடம்
வனரணம் பற்றி வரையச் சொன்னது
என் தவறுதான்.
நதிக்குள் நீர்க்கழிப்பவனிடம்
கங்கைச் செம்புதந்தது
என் தவறுதான்.
நூலகம் எரிப்பவனிடம்
அணிந்துரைக்கு அலைந்தது
என் தவறுதான்.
நெய்பற்றி எரியும் நெருப்பு மாதிரி
பொய்பற்றி எரிகின்றன உன் புரட்டுக் கவிதைகளும்.
Comments
Post a Comment