நகரம் நோக்கி நகர்...






புறவழிச் சாலையோரங்களில்
புலம் பெயருங்கள்
இடை நில்லாப் பேருந்துகளில் இனி
கிராமத்தாருக்கு இடமில்லை
நகரத்தை விட்டு நாலுமைல்
தொலைவில் உள்ளீர்களாம்
விரைவஞ்சல் நிறுவனங்கள்
கடிதப் பதிவுகளை ஏற்க மறுக்கின்றன.
பள்ளிக் கூடத்திற்குப் பாவம்
பிள்ளைகள்
பத்துக் கிலோமீட்டர் அலைகிறார்கள்
சாராயக் கடைகள் மட்டும்
சந்துக்கு இரண்டுண்டு
இனி
உங்கள் கிராமத்தை
நகரத்திற்கருகே
நகர்த்துவதைத் தவிர
வேறு வழியில்லை...




முரண்
 
பென்சில்
செய்வதே
பெரிய மரத்தை
அறுத்துத் தானே!
 
குழுப்புகைப்படம்
ஒவ்வோர் ஆண்டும்
மூன்றாமாண்டு முடித்துச் செல்கிற
மாணவ மாணவிகளுடன்
குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறபோது
யாரேனும் ஒருவர்
கண்ணை மூடத்தான் செய்கிறார்கள்

புகைப்படக் கருவியின்
ஒளி உமிழ் விளக்கு
கணநேரத்தில்
வெள்ளை ஒளிக் கற்றையை
வேகமாக வீசும்போது
யாரேனும் ஒருவர்
கண்மூடத்தான் செய்கிறார்கள்.

முந்தைய வினாடிகளை விடப்

பயன்பெறும் வினாடிகளில்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்