சொல்லாமலே- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
படியில் அமர்ந்தால்
தரித்திரம் வருமென்றாய்
தலைக்கு மேல்
தனமிருந்தாலும்
தலையணை மீதமராதென்றாய்
அரிசி தின்றால்
மண நாளன்று
மழை கொட்டுமென்றாய்
கிளம்பும்
போது
நிலையில்
தலை தட்டினால்
செம்புத்
தண்ணீரருந்தி
ஒருவிநாடி
அமர்ந்து
செல்லென்றாய்
வரைபடத்தை
வைத்துக்கொண்டு
வானிலை அறிக்கை
வாசிக்கிற
அந்த
வானிலை நிலைய
அதிகாரியைப்போல. . .
வரலாம்
வராமலும்
போகலாம்
எதுவும்
நடக்கலாம்
நடக்காமலும் போகலாம்
என்ற உண்மையை மட்டும்
ஏனெனக்குச்
சொல்லாமலேயே
வளர்த்தாய்
அம்மா?
Comments
Post a Comment