பழங்களும் நாங்களும்...




விரைவாக அழுகிவிடக் கூடாதென
மெழுகிடப்பட்ட ஆஸ்திரேலிய
ஆப்பிள்களைப் போல
மனிதர்களின் தோல்களுக்கும்
நாளை மருந்திடப்படலாம்

பார்த்தவுடன் பரவசத்தை ஏற்படுத்தும்
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட
வாஷிங்டன் ஆரஞ்சுகளைப்போல நாளை
மனிதர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு
நெற்றியில் இரகசியக் குறியீடுகளுடன்
அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.

விதையில்லாத் திராட்சைகளைப் போல
மனிதர்களை மாற்ற
விபரீத விஞ்ஞானம் முயலலாம்.

அழுகிய பழங்களை
அள்ளிப் போட்டு அரைத்துப்
பழக் கூழ் தயாரிக்கிறமாதிரி
மனிதர்களை அரைத்து
எலும்புக் கட்டடங்கள்
எழுப்பப்படலாம்.

என்ன செய்தாலென்ன?
எவர் எதிர்த்துக்
கேட்கப் போகிறார்கள்?


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்