’எலி’மையோடு வாழ்





எலிகளின்
சுரண்டல்கள் சுதந்திரமானவை!

இப்போதெல்லாம் தேங்காய்சில்லுகளைத் தேடி
எங்களூர் எலிகள் போவதேயில்லை
தப்பித் தவறிப் பொறிக்குள் புகுந்துவிட்டாலும்
அதன் முன் கம்பிகளைக் கடித்துக்குதறி
வெளியேறிவிடும் சமார்த்தியமும்
அவற்றுக்கு உண்டு.

இருட்டு வந்தால் இன்பமாய் அலைவதும்
வெளிச்சம் வந்தால்
குளிர் பதனப் பெட்டிக்குப் பின்
புகுந்து கொள்ளவும் அவற்றால் முடிகிறது

அதன் அட்டகாசம் அதிகம்
அபிதான சிந்தாமணியைக் டித்துக்
குதறியிருக்கிறது காகிதக் குப்பையாக..

பொறியில் மாட்டிய எலியை
இரும்பு வாளித் தண்ணீரில்
மூழ்கடித்துக் கொன்ற மகத்தான
மான்மியம் அப்பாவினுடையது.

வாய்கட்டிய கோணிக்குள்
பொறியின் மரக்கதவைத் திறந்துவிட்டு
விறகுக் கட்டையால்
எலியை அடித்துக் கொல்வார்
பட்டுக்கோட்டை மாமா

சுரண்டித் தின்னும் எலிகளுக்கு மத்தியில்
இற்றுப்போன மரச்சட்டங்களால் ஆன புராதனகாலத்து
எலிப்பொறி மட்டும் என்ன செய்துவிட முடியும்?

மாற்றுக்காய்
மருந்து வாங்கி வைத்தாலும்
தின்று செரித்து விட்டு
மறுநாளே அட்டகாசம் செய்கிறது

பூனைகள் புறமுதுகிட்டு ஓடுகிற வரைக்கும்
எலிகள் தானே எஜமானார்கள்!


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

மே-15 உலகக் குடும்ப தினம் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

அனுபவம் எனும் அற்புதஆசிரியர் தினமலர் என் பார்வைக் கட்டுரை : முனைவர் சௌந்தர மகாதேவன்