கேள்வி சவுந்தர மகாதேவன்
எதிரே பார்த்ததும்
ஏனிந்தக்
கேள்வி?
இவரைப்
பார்த்தால்
இதனைக்
கேட்போமென
எவரைப்
பார்த்தாலும்
அதே
கேள்விகள்!
அச்சிட்ட
விண்ணப்பப் படிவம் மாதிரி
அலுக்காத அதே
கேள்விகள்
”நல்லா
இருக்கீங்களா?”
கேட்க
வேண்டுமே
என்பதற்காகக்
கேட்டானேயொழிய
உள்ளமொன்றிக்
கேட்கவில்லை
அப்படி நானும்
கேட்டிருப்பேனே
ஆறெழு
சமயங்களில்.....
சவுந்தர மகாதேவன்
Comments
Post a Comment